பூவெல்லாம்
காயாச்சி=நான்
பூப்பெய்தி
காலமாச்சி…………
எனக்குபின்
மொளச்சதெல்லாம்=மண்ணில்
எப்பொழுதே
மரமாச்சி……….
எல்லாமே
பணமாச்சி=மனம்
எருக்குச்செடி
பூவாச்சி….
எருக்கம்பால்
மறந்துடுச்சி=என்ன
எடுத்துபோட்ட
மருத்துவச்சி….
கல்லெல்லாம்
சிலையாச்சி=என்
கனவெல்லாம்
சிறையாச்சி….
கண்முன்னே
பிறந்ததெல்லாம்=தக்க
காலத்துல
பயிராச்சி…..
பெண்மையே
வறண்டாச்சி=என்ன
பெற்றவர்க்கும்
வயதாச்சி…….
இன்னமும்
பொறக்கலயோ=என்
இளமைகேத்த
புழுபூச்சி…..