தெருவில்வரும்
சூரியனை
கட்டிவைத்து தூக்கிலிடு=அவன்
சேரிநுழைந்து வருகின்றான்……………

இரவுவந்தால்
சந்திரனை
ஆளைவைத்து வெட்டிவிடு=அவன்
சேரியிலும் தெரிகின்றான்……………

குளமென்றால்
தண்ணீரை
சாதிசொல்லி பிரித்துவிடு=ஏன்
எங்கள்தாகம் தீர்க்கின்றான்……………..

வெறியிருந்தால்
யெம்கையால்
விளைந்தவையை விட்டுவிடு=நீ
உண்ணாமலே வழ்ந்திடலாம்…………….

சூடுயிருந்தால் நீயாக
ஒருகல்லையேனும்
நட்டுவிடு=கோயில்
உனக்கென்றே விட்டிடலாம்……..

வெவ்வேறு ரத்தமென்று
நிரூபணம்
செய்துவிடு=உன்
சாதிசொல்லி கூப்பிடலாம்…………..

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book