தெருவில்வரும்
சூரியனை
கட்டிவைத்து தூக்கிலிடு=அவன்
சேரிநுழைந்து வருகின்றான்……………
இரவுவந்தால்
சந்திரனை
ஆளைவைத்து வெட்டிவிடு=அவன்
சேரியிலும் தெரிகின்றான்……………
குளமென்றால்
தண்ணீரை
சாதிசொல்லி பிரித்துவிடு=ஏன்
எங்கள்தாகம் தீர்க்கின்றான்……………..
வெறியிருந்தால்
யெம்கையால்
விளைந்தவையை விட்டுவிடு=நீ
உண்ணாமலே வழ்ந்திடலாம்…………….
சூடுயிருந்தால் நீயாக
ஒருகல்லையேனும்
நட்டுவிடு=கோயில்
உனக்கென்றே விட்டிடலாம்……..
வெவ்வேறு ரத்தமென்று
நிரூபணம்
செய்துவிடு=உன்
சாதிசொல்லி கூப்பிடலாம்…………..