கரைதாண்டி வந்தெந்தன்
காதலி கொன்றாய்=நான்
கண்மூடி திறப்பதற்குள்
காதலைத் திண்றாய்…………

இதயத்தை அறுத்துவிட்டு
உடலையேன் விட்டாய்=என்
ஈரலை மணலில்வைத்து
உப்புநீரால் சுட்டாய்……..

கிளிஞ்சல்கள் தேடியெந்தன்
முத்தரசி கூட்டிவந்தேன்=நீ
கிழிசலை தைத்துகொள்ள
முத்தூசி செய்தாயே…….

அலைமடியில் தூளியாட
ஆலங்கிளி அழைத்துவந்தேன்=நீ
அவசரமாய் அகோரமாய்
அதையள்ளி புதைத்தாயே….

அடுத்தகரை பார்த்துவர
ஆசைகளை சேர்த்துவந்தேன்=நீ
அர்த்தமற்று கரைதாண்டி
அன்பவளை குடித்தாயே……

பிறந்தவுடன் சூரியனே
மேல்நோக்கி போகின்றான்
பெற்றவளே நீமட்டும்
மண்பார்க்க வந்ததென்ன…..

திமிங்கல சுராகூட
இரைதேடி வரவில்லை=நீ
திண்பதற்கு இயற்கையிலும்
இங்கொன்றும் முளைக்கலியே…

மீனள்ளி வந்துதானே
வயிர்கழுவி வாழ்கின்றோம்=நீ
மீதமுள்ள உயிர்வாழ
மீண்டும்மொரு வழியசொல்லு….

அவளின்றி நானொன்றும்
உயிர்வாழ முடியாது=இதோ
அவளோடு செர்த்துவிடு
என்னோடு உலகைவிடு………

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book