கரிக்கட்டை யானதிங்கே
தேகம் =மனம்
கலங்காதே காதலொரு
சோகம்…………………………..
கைக்குட்டை போலவொரு
வானம் =தினம்
காத்திருந்தும் பொழியவில்லை
மேகம்……………………………………..
கூட்டுபுழுவாக =ஒரு
காட்டுக்குள் கிடந்தவனை
வண்ணத்து பூச்சியாக்கி
வானத்தில் விட்டவளே…………
ரோட்டுத் தெருவோரம்=ஒரு
காகிதமாய் இருந்தயென்னை
பாட்டு கவிதையாக்கி
பக்கத்தில் அமர்ந்தவளே…………
மீட்டும் வீணையினை=ஒரு
பாட்டும் பாடவைத்தாய்
பாடி முடிப்பதற்குள் =ஏன்
நாணை அறுத்துவிட்டாய்?