கரிக்கட்டை யானதிங்கே
தேகம் =மனம்
கலங்காதே காதலொரு
சோகம்…………………………..

கைக்குட்டை போலவொரு
வானம் =தினம்
காத்திருந்தும் பொழியவில்லை
மேகம்……………………………………..

கூட்டுபுழுவாக =ஒரு
காட்டுக்குள் கிடந்தவனை
வண்ணத்து பூச்சியாக்கி
வானத்தில் விட்டவளே…………

ரோட்டுத் தெருவோரம்=ஒரு
காகிதமாய் இருந்தயென்னை
பாட்டு கவிதையாக்கி
பக்கத்தில் அமர்ந்தவளே…………

மீட்டும் வீணையினை=ஒரு
பாட்டும் பாடவைத்தாய்
பாடி முடிப்பதற்குள் =ஏன்
நாணை அறுத்துவிட்டாய்?

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book