வாடி கசங்கி
வாசம் தொலைத்த
மலரானேன்….
வார்த்தை கேட்க
வழக்கு தொடுக்கும்
நிலையானேன்….
மழையின் வருகை
மண்மணம் செய்கையில்
மயிலாய் நீயின்றி
மனநோயானேன்….
காற்றின் கடுமை
கனப்புயல் அடிக்கையில்
கனியாய் நீயின்றி
கடுங்குளிரானேன்….
தெருவில் வெள்ளம்
தேராய் ஓடயில்
தேவதை நீயின்றி
தேகம் ஒடிந்தேன்…
கொடியில் ஆடைகள்
கொஞ்சமும் உலராமல்
கொழுந்தாய் நீயின்றி
கொடிநாண் ஆனேன்…
தொடர்மழை திருடி
தொலைபேசி இழந்து
தொகையால் மொழியின்றி
தொழுமனிதனானேன்…
இரவு , மேகம்
இரண்டும் கருக்க
இமையாய் இல்லாமல்
இவையினும் கருத்தேன்….
கூரை வடியும்
குறுநீர் மழைசொட்டு
குயிலாய் பொட்டென்று
குறிப்பாய் சேர்த்தேன்…
ஆடும், மாடும்
அம்மா யென்கையில்
ஆசையாள் அவளின்றி
அவைகளாய் காய்ந்தேன்…