தூக்குதண்டணை

இரக்கம் இல்லாத இரும்பான குணமொன்று
இயற்கை அழிக்க இருக்கின்றதே-பாரடா
இந்திய தேசத்திலாவது இல்லாமல் ஆக்குவதை
இணைந்து துணிந்து செய்.

தீவிரவாதம்

மனதைக் கெடுக்கும் மதிகெட்ட செயலொன்று
மனிதம் குடிக்க நடக்கின்றதே-கேளடா
உலகத்தில் உயிர்கள் உலவுமோ
என்னுமோர் நிலையில் உள்ளோமடா.
 எப்படி வளர்ந்தது எமலோக இனமிங்கு
எல்லோரையும் ஏப்பமிட நினைக்கின்றதே-ஏனடா
எரித்துவிட வேண்டியதை வளர்த்து பெருக்குவதை
எடுத்து ஆளுகின் றாய்.
வறுமை கொடுக்கும் வஞ்சமான வலையாக
வாதம் பரந்து கிடக்கின்றதே-அறியடா
அகிலத்து துன்பங்கள் அகலாமல் இருப்பதை
அறிந்து செயலாற்ற டா.
கந்தகம் எரிக்க இழக்கும் செல்வத்தை
கைக்குள் கொண்டுவர துடிப்பதையே-செய்யடா
இருக்கும் இன்னளெல்லாம் இல்லாமல் விலக
இனியேனும் அறிந்திட டா.

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book