கருப்பங் காடுகளின்
காய்ந்த சருகுகளில்
ஈரமாய் தெரிகின்றது=என்னை
ஈன்றவளின் கால்தடம்…..

கால்தடத்தின் ஈரத்திலும்
கஞ்சிபானை ஓரத்திலும்
பிசுபிசுக்கின்றது=இந்த
பிரபஞ்சத்தின் மொத்தவறுமை….

கொளுத்தும் வெயிலில்
பற்றிகொள்ளவில்லை
கொடுமையில் வெடித்த=இவள்
பஞ்சு தேகம்……..

கடற்கறை மணல்களின்றி
கரும்புக்காட்டின் நடுவில்
காய்கின்றாள்=தினம்
உப்புபூக்க கருவாடாய்….

கட்டி போடுகின்ற
கரும்புக் கட்டுகளில்
இனிப்புகள் இருப்பதை=இவள்
சுவைத்ததே இல்லை….

பாலைவணத்தின்
வெடித்த பகுதிகளை
பாதங்களில்=இவள்
தொகுத்து வைத்திருக்கின்றாள்…

பணக்கட்டு கல்லூரியில்
கரும்புகாட்டு காசுகளால்=என்னை
படிக்க வைத்த
என்தாய் கருப்பாயி…

பணம் கொடுத்து
பாசம் பேசயில்
பீறிட்டு அழுதது=என்
பிஎ தமிழ்…..

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book