பேருந்து நிலையமெங்கும்
பெட்டிப்பால்காரிகள்
பிச்சை யெடுக்கின்றாற்கள்….
காணும் இடங்களிளெல்லாம்
கைகுழந்தையோடு
கையேந்து கின்றார்கள்….
நிற்கும் பேருந்துகளின்
நடுத்துநர்களாய்
நாணயம் கேட்கின்றார்கள்….
பச்சை குழந்தைகளின்
பால்முகங்களை
பிழைப் பாக்குகின்றார்கள்…
குலத்தொழில் இதுவல்ல
குத்தகைகாரிகள்
கத்தி நடிக்கின்றார்கள்…
பயணிகளே யாரும்
பார்க்காதநேரம்தான்
பால் ஊட்டுவார்கள்…
வயிற்றில் சுமந்ததில்லை
வைத்திருப்பவையெல்லாம்
வாடகை குழந்தைதானாம்!!!