சுதந்திர காற்றை
சுவாசித்த கனத்திலிருந்து
சுண்ணாம்பு பூசிய
சுவராகத்தான் நம்தேசம்….வண்ணங்களையும்
தூரிகைகளையும்
வாங்கியதோடுசரி
வரைந்தது ஒன்றுமில்லை…
சுவாசித்த கனத்திலிருந்து
சுண்ணாம்பு பூசிய
சுவராகத்தான் நம்தேசம்….வண்ணங்களையும்
தூரிகைகளையும்
வாங்கியதோடுசரி
வரைந்தது ஒன்றுமில்லை…
சூலத்தை வரைவதா
பிறையை வறைவதா
சிலுவையை வறைவதா
போதிமரம் வறைவதா….
வரைபொருள்
தேடியே
விரையமாகிவிட்டோம்…
சுவரென்னவோ
சும்மாத்தான்
இருக்கின்றது…..