முகில்களின் முதுகிளெல்லாம்
முச்சங்க தமிழோட்டிய=என்
மூதையார்
முகம்காண கண்டேன்!!!
இரவுகளின் இடுப்பிளெல்லாம்
இலக்கியங்கள் அமரவைத்த=என்
இராவணர்கள்
இனம்காண கண்டேன்!!!
தென்றல்களின் மடியிளெல்லாம்
தெம்மாங்கு மெட்டமைத்த=என்
தென்னவர்கள்
தேர்காண கண்டேன்!!!
குன்றுகளின் தலையிளெல்லாம்
குரவஞ்சி பாடிவைத்த=என்
குலத்தவர்கள்
குனம்காண கண்டேன்!!!
நச்சத்திர முகத்திளெல்லாம்
நற்றிணையால் பொட்டுவைத்த=என்
நாட்டவர்கள்
நாடுகாண கண்டேன்!!!
பண்பாட்டு பார்வையெல்லாம்
பரிபாடல் மீதுவைத்த=என்
பாரிவள்ளல்
பலம்காண கண்டேன்!!!
முதுகிட்டு மகன்கிடந்தால்
முலையறுப்பேன் யென்றுரைத்த=என்
தமிழச்சி
தவம்காண கண்டேன்!!!
முரட்டுப்புலி தெருவந்தால்
முறத்தாலே விரட்டிவைத்த=என்
முத்தமிழள்
மகம்காண கண்டேன்!!!
கனாகண்டேன் தோழி
கருவறைக்கு முன்பே=என்
கன்னித்தமிழ்குறித்து
கனாகண்டேன்!!!!!