முகில்களின் முதுகிளெல்லாம்
முச்சங்க தமிழோட்டிய=என்
மூதையார்
முகம்காண கண்டேன்!!!

இரவுகளின் இடுப்பிளெல்லாம்
இலக்கியங்கள் அமரவைத்த=என்
இராவணர்கள்
இனம்காண கண்டேன்!!!

தென்றல்களின் மடியிளெல்லாம்
தெம்மாங்கு மெட்டமைத்த=என்
தென்னவர்கள்
தேர்காண கண்டேன்!!!

குன்றுகளின் தலையிளெல்லாம்
குரவஞ்சி பாடிவைத்த=என்
குலத்தவர்கள்
குனம்காண கண்டேன்!!!

நச்சத்திர முகத்திளெல்லாம்
நற்றிணையால் பொட்டுவைத்த=என்
நாட்டவர்கள்
நாடுகாண கண்டேன்!!!

பண்பாட்டு பார்வையெல்லாம்
பரிபாடல் மீதுவைத்த=என்
பாரிவள்ளல்
பலம்காண கண்டேன்!!!

முதுகிட்டு மகன்கிடந்தால்
முலையறுப்பேன் யென்றுரைத்த=என்
தமிழச்சி
தவம்காண கண்டேன்!!!

முரட்டுப்புலி தெருவந்தால்
முறத்தாலே விரட்டிவைத்த=என்
முத்தமிழள்
மகம்காண கண்டேன்!!!

கனாகண்டேன் தோழி
கருவறைக்கு முன்பே=என்
கன்னித்தமிழ்குறித்து
கனாகண்டேன்!!!!!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book