தவறிவந்த
அழைப்பில்=என்னை
தத்தெடுத்து கொண்டவளே!!

வாலிப
பருவத்தில்=என்னை
குழந்தையாக்கி தந்தவளே!!

தவறென்றால்
பொறுத்துவிடு=என்னை
முன்பைபோல வாழவிடு!!

கைபேசி
தொடும்போதெல்லாம்=உன்
கரம்பற்ற விழைகின்றேன்!!

கதைபேசி
கழியும் காலம்=இனி
விரையமென்று நினைக்கின்றேன்!!

சினுங்கி சிரித்து
பேசியே=என்னை
கற்பமாக்கிவிட்டாய்!!

பிரசவத்திற்கு
முன்பாவது=உன்
முகத்தைவந்து காட்டிவிடு!!

இரவென்று
இருந்தாலும்=உன்னை
நிலவென்றே நான்சொல்வேன்!!

இனியென்னை
ஏங்கவைத்தால்=நான்
இயல்பருந்து தான்போவேன்!!

நீ
காற்றில் தரும்
முத்தங்களை=என்
கைபேசி எடுத்துகொள்ள,

என்
கன்னம் வந்து
சேர்வதெல்லாம்=உன்
முத்தமல்ல வெரும்சத்தம்!!

உன்
நெஞ்சு சிந்தும்
கொஞ்சல்களை=இந்த
காற்றலைகள் வைத்துக்கொள்ள,

என்
காதுவந்து கேட்பதெல்லாம்=உன்
கொஞ்சலல்ல சிறுவெப்பம்!!

கைபேசி
காதலியே=என்
கண்முன்னே வந்துவிடு!!

பொய் பேச்சு
இனிவேண்டாம்=உன்
பொன்மார்பு தந்துவிடு!!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book