அன்பே ஆச்சிமொழி =அங்கு
நீயும் நானும்
அரசன் அரசினடி..காதலர்கள்
களிக்கும்படி நடக்கும்
குடியரசு ஆட்சியடி….
கயவர்கள்
காயும்படி இருக்கும்
கட்டாய சட்டமடி…
காதலியை
இழக்காமல்,
கட்டுகின்ற தாஜ்மகால்.!
காயங்கள்
இல்லாமல்,
எழுதுகின்ற கவிதைகள்.!
பிரிவுகள்
காணாமல்,
வளர்த்தெடுக்கும் தாடிகள்.!
மறுப்புகள்
சொல்லாமல்,
இணைக்கின்ற பெற்றோர்கள்.!
அரண்மணை
அந்தபுரம்,
அன்புக்கான கோட்டைகள்.!
நகரங்கள்
கிராமங்கள்,
அனைத்துமே மகிழ்வுகள்.!
வழகுகள்
இல்லாத,
அரசனின் அவைகள்.!
பிசக்குகள்
சொல்லாத,
கணவர்களின் மனைவிகள்.!
பின்னடைவே
வாங்காத,
வெற்றிபெறும் படைகள்.!
குறைவற்று
வளர்ந்திடும்,
அரண்மனை கஜானாக்கள்.!
அன்பே
நம்
காதல் தேசத்தில்,
அன்பே ஆட்சிமொழி.!
அங்கு
நீயும் நானும்,
அரசன் அரசியடி!