வேலிபோடும் வெட்கங்களை
வெளியேற்ற முடியாமல்
சிவந்துபோன சிலையாக
சிரிப்புகளை மறைக்கின்றாள்.!!

தாளிசூடும் நிமிடங்களை
தலைவன்போடும் முடுச்சுகளை
தாங்கிட தினம்தினம்
கனவினில் பழகுகின்றாள்.!!

ஊமை விழிகளுக்கு
உயிரை குடிக்கும்
மருந்தை ஏற்றுகின்றாள்.!!

பூவான மேனிக்கு
தீயினை மூட்டுகின்ற
திரவங்களை ஊட்டுகின்றாள்.!!

ஈரமான உதடுகளின்
ஈரலை அறுத்து
முத்தக்கடலில் மூழ்கடிக்கின்றாள்.!!

ஆகாய நிலவின்
அன்பு இதம்மாற்றி
சுட்டெரிக்கச் சொல்லிவிட்டாள்.!!

பூமி பந்தில்
பிறந்து வளர்ந்ததினால்
பூகம்பம் விதைத்துவிட்டாள்.!!

புயலின் தலைமகளை
பூத்து பனியவைத்து
புருவங்களில் அடைத்துவிட்டாள்.!!

இரவு உறக்கங்களை
எடுக்கும் ஓய்வுகளை
ஏனோ எடுத்துக்கொண்டாள்.!!

என்னை காதலித்து
ஏக்கம் திணித்துவிட்டு
ஏங்கித் தவிக்கின்றாள்.!!

ஊரார் தூற்றியும்
உற்றார் பேசியும்
உனக்கே என்கின்றாள்.!!

வரலாற்று பதிவுகளில்
வந்துபோன நாட்களில்=காதல்
காவியம் எழுதுகின்றாள்.!!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book