சங்கத் தமிழா
தலைத்தூக்கு…
சந்தத் தமிழை
சரியாக்கு….
தாயின் மொழியை
நீ பேசு…
தாழ்மை குணத்தை
விலைபேசு….
அன்னை கொடுத்த
அமிழ் போற்று..
அகிலம் சுற்றும்
மொழியாக்கு….
சிந்தை துளக்கும்
நதிகாற்று..
சித்தர் வர்த்த
பெரு ஊற்று…
பொதிகை பாடும்
பொற்பாட்டு….
பொறுமை போதும்
உடைபூட்டு….
ஆங்கில பள்ளிகளை
அணைபோட்டு…
ஆனந்த தமிழினை
தாலாட்டு….
சின்னஞ்சிறு மாணவரை
இடைநிருத்து….
சிந்திக்கும் திறன்வளர்த்து
நீ அனுப்பு…
கொல்லும் மழலையர்
பள்ளிசாத்து.=அது
இளம்வயதில் பண்ணுகின்ற
மணமுடிச்சு……
சாதிகளின் சங்கங்களை
இனிதொலைத்து.=நீ
சங்கத்து தமிழினை
காப்பாற்று….
மொழிசொல்லி ஏமாற்றும்
இனம்காட்டு.=நீ
மொத்தமாய் அவர்களுக்கு
அனல்மூட்டு……