செத்தும்
வாழ்கின்ற மனிதர்களாய்
சேரியில் மக்கள்…

செல்வம்
கொழிக்கின்ற செல்வரெல்லாம்
இவர்களின் பிச்சை…

அரைவயிறு
அரையுணவு =இவர்களுக்கு
அவலத்தில் வாழ்வு….

ஆசைகளை கொன்று
ஆதிக்கம் வெறுத்து =இவர்களுக்கு
அன்பால் மனது…

உழைக்கமட்டும்
கற்றுகொண்டு =இவர்கள்
புரட்சி செய்யும்
ஊமைகள்…

உள்நாட்டு
உறவுகளால் =இவர்கள்
ஊனமான அகதிகள்…

இன்னல்கள்
அத்துனையும் =இவர்களிடம்
சக்தி இழக்கின்றன…

கோயில்களை
இவர்களே கட்டுவதால்
நுழைய தடுக்கையில் =இவர்கள்
தடுமாறுவதில்லை….

குளங்களை
இவர்களே வெட்டுவதால்
குடிக்க தடுக்கையில் =இவர்கள்
குமுறுவதில்லை…..

கூத்துகளும்
வித்தைகளும் =இவர்கள்
ஆதரவால்தான்
அனாதையாகவில்லை….

இவர்களும்
மனிதர்கள்தானே =ஏன்
இவர்கள்
மதிக்கப்படுவதேயில்லை……

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book