வங்கக் கடற்கரை
மணலில் =உன்
காலடி பரப்பின்
நடுவில்……
நான்
எழுதிவைத்த கடிதமும்….
எழுதிகொண்ட கவிகளும்….
உன்னை
தொட்டுச்சென்ற அலைகளை=நான்
துரத்தியதும்…
முத்தமிட்டதும்…..
உன்
சிரிப்பொலி கிளிஞ்சல்களை=நான்
ரசித்ததும்…..
எடுத்ததும்…
நீ
துரத்திய நண்டுகளை=நான்
துளைபோட்டு தோற்றதும்….
துவண்டுதுவண்டு களைத்ததும்……
உன்
ஆறாம் விரலாய்
ஐஸ்கிரீம் இருக்க=நான்
சுவைக்கப்பட்டதும்….
கரைந்துபோனதும்……
உன்
மீனான கண்கள்
மீன்களைப் பார்க்க=நான்
வழுவழுத்ததும்…..
துள்ளிகுதித்ததும்…..
நீ
கைநீட்டி காட்டிய
ஒவ்வொரு படகுமாய்=நான்
தவழ்ந்ததும்…..
தத்தளித்ததும்….
உன்
ஈரமான ஆடைகளை
உலர்த்தியபோது=நான்
உலர்ந்ததும்…
உணர்ந்ததும்…….
உன்
கூந்தலின் வழியே
நீர்துளி வழிந்தபோது=நான்
குளிர்ந்ததும்….
துளிர்த்ததும்….
உன்
பொட்டழிந்த நெற்றிகாய்=நான்
போராடியதும்…
பொறுமையிழந்ததும்….
உன்
குடும்பத்தாருடன்
நீ கிளம்பியபோது=நான்
கிளம்பியதும்….
தேம்பியதும்…..
உனக்கும்
தெரியுமா
தேவதையே=அந்த
அந்திமாலை பொழுதுகளும்……
ஆழிமகள் பார்வைகளும்……
நம்மைத்தான்
கவனித்தன=நாம்
மீண்டும் சந்திக்கவே
தியாணித்தன…..